ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
‛சின்னக்குயில்' என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கேஎஸ் சித்ரா. 40 ஆண்டுகளாக தென்னிந்திய மற்றும் இந்திய மொழிகளில் பாடி வருகிறார். விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்த சித்ராவிற்கு 2002ல் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தார். கடந்த 2011ல் துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததில் நந்தனா இறந்தார். அவர் இறந்து 12 ஆண்டுகள் ஆன பின்னும் மகளின் பிரிவை அவரால் மறக்க முடியவில்லை.
நந்தனாவிற்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக நந்தனாவின் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‛‛நீ என் இதயத்தை துளைத்து சென்றுவிட்டாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா'' எனப் பதிவிட்டுள்ளார் சித்ரா.