'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
ஒரு படத்தின் பட்ஜெட்டில் கணிசமான பகுதி சம்பளமாகத்தான் செல்லும் என்பார்கள். ஆனால் யாருக்குமே சம்பளம் கொடுக்காமல் நடிகர் ஜெய் ஆகாஷ், ‛ஜெய் விஜயம்' என்ற படத்தை இயக்கி, அவரே தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். இதில் அக்ஷயா கண்டமுத்தன் கதாநாயகியாக நடிக்கிறார். சதீஷ்குமார் இசை அமைத்துள்ளார். பால்பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
தில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது: ‛‛இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். ஜெய் விஜயம் என்று படத்துக்கு டைட்டிலை வைத்ததற்கு காரணம் என் பெயர் ஜெய், விஜயம் என்றால் வெற்றி. இதற்கு முன்பு பெரிய பட்ஜெட் படம் செய்தேன். எவ்வளவு செலவு செய்தாலும் கதைதான் மிக முக்கியம். எனவே நல்ல கதைகள் தேர்வு செய்யச் சொன்னார்கள். ஆனால் கிடைக்கவில்லை. எதுவுமே வித்தியாசமாக இல்லை. அதனால் ஒரு ஆங்கில படத்திலிருந்து இந்த கதையை எடுத்தேன். அதற்காக நிறைய விலை கொடுத்துவிட்டேன். அது என்ன கதை என்பதை இப்போது சொல்ல மாட்டேன்.
படம் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மலையாள படம் எப்படி எடுப்பார்களோ அப்படி எடுத்திருக்கிறேன். இதில் நடித்த எல்லோருக்குமே நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் யாருமே சம்பளம் வாங்காமல் நடித்தார்கள். ஹீரோயின் அக்ஷயா கூட சம்பளம் வாங்கவில்லை. டிவியில் பிரபலமாக நடித்து வரும் இவரை நான் தான் என்னுடைய அமைச்சர் ரிட்டர்ன் படத்தில் அறிமுகப்படுத்தினேன். அந்த படத்துக்கு சம்பளம் கொடுத்தேன். ஆனால் கதை பிடித்திருந்ததால் ஜெய் விஜயம் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார்.