பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ மற்றும் கவுஸ்டப் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'. பாரி கே.விஜய் இயக்கி உள்ள இந்த படத்தில் வைபவ், பார்வதி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் வைபவ் பேசியதாவது: எப்போதும் ஜெய், பிரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான பேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்றார்.
நடிகை பார்வதி பேசியதாவது : எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியான ஒரு படத்தில் இப்போது நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட் , ஆனந்த்ராஜ் என நல்ல அனுபவமிக்க நடிகர்களோடு வேலை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். என்றார்.