நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
திரைப்படம் தொடர்பான பல புத்தகங்கள் எழுதியவரும் வசனகர்த்தாவுமான வேலுமணி காலமானார். விஜயகாந்தின் நெருக்கமான நண்பரான அவர் தேவன், எங்கள் ஆசான், விருதகிரி படங்களுக்கு வசனம் எழுதினார். 30 ஆண்டு திரை அனுபவம் கொண்ட வேலுமணி, இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
55 வயதான வேலுமணி பல்வேறு உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியும், தங்கையும் அவரை கவனித்து வந்தனர்.
விஜயகாந்த்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வேலுமணி அவரது உடல்நிலை குறித்தும் மிகுந்த கவலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.