தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

திரைப்படம் தொடர்பான பல புத்தகங்கள் எழுதியவரும் வசனகர்த்தாவுமான வேலுமணி காலமானார். விஜயகாந்தின் நெருக்கமான நண்பரான அவர் தேவன், எங்கள் ஆசான், விருதகிரி படங்களுக்கு வசனம் எழுதினார். 30 ஆண்டு திரை அனுபவம் கொண்ட வேலுமணி, இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
55 வயதான வேலுமணி பல்வேறு உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியும், தங்கையும் அவரை கவனித்து வந்தனர்.
விஜயகாந்த்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வேலுமணி அவரது உடல்நிலை குறித்தும் மிகுந்த கவலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.