சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி படமாக அமைந்த அரண்மனை 4 | அஜித்தை அடுத்தடுத்து இயக்க போகும் சிவா - மோகன் ராஜா | ‛இந்தியன் 2' முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு | சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் | அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகும் சமந்தா | தக் லைப் கதையில் மணிரத்னம் செய்த அதிரடி மாற்றம் | அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் | கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா |
ஹாலிவுட் முன்னணி நடிகர் மைக்கல் டக்ளஸ். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு 'சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
விருதை வாங்குவதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ், தற்போது தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்தவர் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அவருடன்மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலானும் வந்திருந்தார்.
கோவிலில் சுற்றிப் பார்த்த அவர் அதன் பிரம்மாண்டத்தையும், ராஜ கோபுரத்தையும் பார்த்து வியந்தார். அது குறித்து கேட்டு அறிந்தார். மத்திய, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.