மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஹாலிவுட் முன்னணி நடிகர் மைக்கல் டக்ளஸ். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு 'சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
விருதை வாங்குவதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ், தற்போது தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்தவர் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அவருடன்மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலானும் வந்திருந்தார்.
கோவிலில் சுற்றிப் பார்த்த அவர் அதன் பிரம்மாண்டத்தையும், ராஜ கோபுரத்தையும் பார்த்து வியந்தார். அது குறித்து கேட்டு அறிந்தார். மத்திய, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.