மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது அவரது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. பிரபாஸை ஒரு நல்ல நடிகராக செதுக்கியதில் அவரது நடிப்பு குருவான சத்யானந்த்திற்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தான் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜெயம் ரவி உள்ளிட்டோரையும் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் நடிப்பிற்காக பட்டை தீட்டியவர்.
எப்போதுமே தனது குருவிற்கு உரிய மரியாதையை செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து சத்யானத் பிறந்தநாளில் தவறாமல் அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, “இந்த கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடிகார செயின் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொடுப்பதற்கு கடைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று சற்று விளையாட்டாகவும் கமெண்ட் அடித்துள்ளார்.