அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள் : பார்வதிக்கு இயக்குநர்கள் வேண்டுகோள் | ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் கைகோர்த்த மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் | தர்ஷனுக்கு உதவி செய்த நபர் கைது : விஷயம் கேள்விப்பட்ட தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணம் | நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு | சல்மான் கான் - அட்லி புதிய கூட்டணி? | இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்… | 'கண்ணப்பா' - தெலுங்கு தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த ப்ரீத்தி முகுந்தன் | ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் நோட்டீஸ் | கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன் நடித்தும் கண்டுகொள்ளாத வினியோகஸ்தர்கள் | தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் சிலை திறப்பு விழா : பி.சுசீலா, நாசர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு |
கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவர் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படம் தான் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தி உள்ளது.
நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியதால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை கவனித்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் இதே போன்று பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிஜ சம்பவம் ஒன்றை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறாராம்.
கடந்த 1979ல் கேரள கப்பல் கழகத்திற்கு சொந்தமான எம்வி கைரளி என்கிற கப்பல் 20000 டன் எடை கொண்ட இரும்பை ஏற்றிக்கொண்டு 49 பணியாளர்களுடன் ஜெர்மனியை நோக்கி பயணித்தபோது எதிர்பாராத விதமாக கடலில் ஏற்பட்ட மோசமான சூழலால் திடீரென மாயமானது. இதை மையப்படுத்தி இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை தனது பாணியில் திரைக்கதையாக மாற்றி எழுத்தாளர் ஜோஷி ஜோசப் என்பவருடன் இணைந்து உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 படம் போல இந்த படமும் ரசிகர்களை உறைய வைக்கும் என உறுதியாக நம்பலாம்.