திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
அறிமுக இயக்குனர் அருள்செழியன் இயக்கத்தில், அந்தோணிதாசன் இசையமைப்பில், யோகிபாபு, விதார்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'குய்கோ'. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் மிகவும் பாராட்டினர். படத்திற்கான விமர்சனங்களும் பாராட்டும்படியே வந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சரியாகச் செய்யவில்லை. கடந்த வாரம் 24ம் தேதி வெளியான இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை அதற்கு சில நாட்களுக்கு முன்பு 21ம் தேதிதான் வெளியிட்டார்கள். இப்படி ஒரு படம் வந்தது பலருக்கும் தெரியவில்லை. தமிழகத்தின் பல முக்கிய ஊர்களில் கூட இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான அருள்செழியன் நேற்று அவரது பேஸ்புக்கில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக 'பீரிசர் பாக்சில்' வைத்து ஆணி அடித்து, உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள்..
'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்..
பிகு : துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும். . …,” என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.