ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல். “சலார்' படத்தின் மையக் கரு நட்பு பற்றியது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறியதுதான் கதை. நண்பனாக இருந்து எதிரியாக மாறுபவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிரபாஸ் காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் முழுமையான கதையின் பாதியும், இரண்டாவது பாகத்தில் அடுத்த பாதியும் இடம் பெறும். கதையில் பல விஷயங்கள் இருப்பதால்தான் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டோம்.
'கேஜிஎப்' படத்துடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். இரண்டு படத்திலும் வெவ்வேறு உணர்வுகள், கதைகள். கதை சொல்லப்படும் விதத்தையும் ஒப்பிட முடியாது. எந்த விதத்திலும் 'கேஜிஎப்' படத்தின் கதையுடன் இப்படம் இணையவில்லை. 'சலார் 2' படம் எப்போது ஆரம்பமாகும் எனத் தெரியாது,” என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'சலார்' படம் வெளியான பின்பு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் பிரசாந்த். இந்தப் படத்துடன் 'கல்கி 2898 ஏடி,' மற்றும் மாருதி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்தப் படங்களை முடித்த பின் 'சலார் 2' பக்கம் வருவாரா, அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது 'சலார்' வெளியீட்டிற்குப் பிறகே தெரிய வரும்.




