பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல். “சலார்' படத்தின் மையக் கரு நட்பு பற்றியது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறியதுதான் கதை. நண்பனாக இருந்து எதிரியாக மாறுபவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிரபாஸ் காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் முழுமையான கதையின் பாதியும், இரண்டாவது பாகத்தில் அடுத்த பாதியும் இடம் பெறும். கதையில் பல விஷயங்கள் இருப்பதால்தான் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டோம்.
'கேஜிஎப்' படத்துடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். இரண்டு படத்திலும் வெவ்வேறு உணர்வுகள், கதைகள். கதை சொல்லப்படும் விதத்தையும் ஒப்பிட முடியாது. எந்த விதத்திலும் 'கேஜிஎப்' படத்தின் கதையுடன் இப்படம் இணையவில்லை. 'சலார் 2' படம் எப்போது ஆரம்பமாகும் எனத் தெரியாது,” என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'சலார்' படம் வெளியான பின்பு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் பிரசாந்த். இந்தப் படத்துடன் 'கல்கி 2898 ஏடி,' மற்றும் மாருதி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்தப் படங்களை முடித்த பின் 'சலார் 2' பக்கம் வருவாரா, அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது 'சலார்' வெளியீட்டிற்குப் பிறகே தெரிய வரும்.




