தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல். “சலார்' படத்தின் மையக் கரு நட்பு பற்றியது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறியதுதான் கதை. நண்பனாக இருந்து எதிரியாக மாறுபவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிரபாஸ் காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் முழுமையான கதையின் பாதியும், இரண்டாவது பாகத்தில் அடுத்த பாதியும் இடம் பெறும். கதையில் பல விஷயங்கள் இருப்பதால்தான் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டோம்.
'கேஜிஎப்' படத்துடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். இரண்டு படத்திலும் வெவ்வேறு உணர்வுகள், கதைகள். கதை சொல்லப்படும் விதத்தையும் ஒப்பிட முடியாது. எந்த விதத்திலும் 'கேஜிஎப்' படத்தின் கதையுடன் இப்படம் இணையவில்லை. 'சலார் 2' படம் எப்போது ஆரம்பமாகும் எனத் தெரியாது,” என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'சலார்' படம் வெளியான பின்பு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் பிரசாந்த். இந்தப் படத்துடன் 'கல்கி 2898 ஏடி,' மற்றும் மாருதி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்தப் படங்களை முடித்த பின் 'சலார் 2' பக்கம் வருவாரா, அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது 'சலார்' வெளியீட்டிற்குப் பிறகே தெரிய வரும்.