ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோகன் ராஜா. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்றும் கூறும் மோகன் ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.