பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோகன் ராஜா. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்றும் கூறும் மோகன் ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.




