தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், சிம்ரன் நடித்துள்ள படம், 'துருவ நட்சத்திரம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 5 வருடங்களுக்கு முன் தயாரான இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.
படம் குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறியதாவது: இந்த படத்தின் கதை நான் சூர்யாவுக்கு எழுதியது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. காரணம் குறித்து இப்போது பேசத் தயாராக இல்லை. அதன் பிறகு ரஜினியிடம் சொன்னேன் அவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் ஏனோ நடிக்கவில்லை. அதன்பிறகுதான் விக்ரம் நடிப்பது முடிவானது. இதனால் கதையில் விக்ரமிற்கு ஏற்றவாறு சில மாறுதல்களை செய்தேன்.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியை கொண்டு தயாராகி உள்ள படம். பல பாகங்களாக எடுக்க திட்டமிட்ட படம். தற்போது முதல் பாகம் வெளியாகிறது. இந்த பாகத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான டுவிஸ்ட் இருக்கும். அடுத்தடுத்த பாகங்களை கண்டிப்பாக இயக்குவேன். அந்த பாகங்களில் வேறு ஹீரோ, வேறு வில்லன்கள் இருப்பார்கள். படம் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இதன் தொடர்ச்சியை உருவாக்கி கொண்டே இருப்பேன்.
துருவ நட்சத்திரம் என்பது தனித்துவமானது. அதில் எந்த ஹீரோவும் நடிக்கலாம். நடிப்பவர்கள் துருவ நட்சத்திரமாவார்கள். இஸ்தான்புல், பல்கேரியா, ஜார்ஜியா, நியூயார்க், துருக்கி, அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ள படம். என்றார்.