மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி சினிமாவில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்று 'மாமன்னன்' படம் வெளியான போதே அறிவித்துவிட்டார். ஆனாலும், அவ்வப்போது சில பல படங்களைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் போடுவதையும் செய்து வருகிறார்.
அந்த விதத்தில் நேற்று வெளியான கன்னடப் படமான 'சப்டா சாகரதாச்சே எல்லோ - சைட் பி' என்ற படத்தைப் பாராட்டியுள்ளார். இப்படம் தமிழில் 'ஏழு கடல் தாண்டி' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
'சார்லி' படத்தில் நடித்த ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த், சைத்ரா அச்சர் மற்றும் பலர் நடித்துளள இப்படத்தை மேஹந்த் எம் ராவ் இயக்கியுள்ளார். படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
“சிறந்த திரைப்பட உருவாக்கம். வாழ்த்துகள் ரக்ஷித் ஷெட்டி பிரதர் அண்ட் டீம். நீங்கள் சினிமாவின் மாயஜாலக்காரர்கள்… பெரிய திரைக்குச் சென்று படத்தைப் பாருங்கள்,” என உதயநிதி பாராட்டியுள்ளார்.