20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உலக அளவில் மொத்தமாக 1200 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
அப்படத்தின் தெலுங்கு வினியோக உரிமை சுமார் 80 கோடிக்கு விற்கப்பட்டது. தெலுங்கில் மட்டும் 140 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து நல்ல லாபத்தையும் கொடுத்தது.
அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்து பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தை இயக்கி முடித்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு உரிமையாக 165 கோடி வரை விற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு நடிகரான பிரபாஸ் படத்தின் கதாநாயகன் என்பதால் 'கேஜிஎப் 2' படத்தை விடவும் இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி 2, கேஜிஎப் 2' ஆகிய படங்களின் வசூலை தெலுங்கில் முறியடித்து புதிய வசூல் சாதனையை 'சலார்' படைக்குமா என்று பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.