இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நேரம், அதைத் தொடர்ந்து பிரேமம் என இரண்டு படங்களிலேயே மலையாள திரை உலகை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதன்பின் ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் நயன்தாரா, பிரித்விராஜை வைத்து கோல்ட் படத்தை இயக்கினார். இந்தபடம் தோல்வி அடைந்தது.
தற்போது நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ். இந்த நிலையில் திடீரென சினிமாவை விட்டு தான் விலகப்போவதாகவும் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை கண்டறிந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், சினிமாவிலேயே வேறு ஏதாவது ஒரு தளத்தில் இயன்றவரை பணியாற்ற இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். ரசிகர்களும் பல பிரபலங்களும் இவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தொடர்ந்து உற்சாகம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்காக ஒரு பாடலை தயார் செய்து வைத்திருந்தார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் அந்த பாடலை அவரால் கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதை தொடர்ந்து என்னால் இந்த பாடலை கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று கூறி நடிகர் பார்த்திபனுக்கு அனுப்பி வைத்தார். பார்த்திபன் அந்த பாடலை கமலுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த பாடலை கேட்டுவிட்டு கமல் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அல்போன்ஸ் புத்ரன் அவரது உடம்பு சுகம் இல்லை என்று சொன்னாலும் கூட மனசு நல்லா இருக்குது. குரல் வேறு சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும். அவர் எடுக்கும் முடிவு கூட அவருடையது என்றாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். டேக் கேர் அல்போன்ஸ் புத்ரன்” என்று கூறியுள்ளார்.