நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நேரம், அதைத் தொடர்ந்து பிரேமம் என இரண்டு படங்களிலேயே மலையாள திரை உலகை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதன்பின் ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், கடந்த வருடம் நயன்தாரா, பிரித்விராஜை வைத்து கோல்ட் படத்தை இயக்கினார். இந்தபடம் தோல்வி அடைந்தது.
தற்போது நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ். இந்த நிலையில் திடீரென சினிமாவை விட்டு தான் விலகப்போவதாகவும் தனக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை கண்டறிந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், சினிமாவிலேயே வேறு ஏதாவது ஒரு தளத்தில் இயன்றவரை பணியாற்ற இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். ரசிகர்களும் பல பிரபலங்களும் இவருக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தொடர்ந்து உற்சாகம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்காக ஒரு பாடலை தயார் செய்து வைத்திருந்தார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் அந்த பாடலை அவரால் கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதை தொடர்ந்து என்னால் இந்த பாடலை கமலிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று கூறி நடிகர் பார்த்திபனுக்கு அனுப்பி வைத்தார். பார்த்திபன் அந்த பாடலை கமலுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த பாடலை கேட்டுவிட்டு கமல் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அல்போன்ஸ் புத்ரன் அவரது உடம்பு சுகம் இல்லை என்று சொன்னாலும் கூட மனசு நல்லா இருக்குது. குரல் வேறு சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும். அவர் எடுக்கும் முடிவு கூட அவருடையது என்றாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். டேக் கேர் அல்போன்ஸ் புத்ரன்” என்று கூறியுள்ளார்.