ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஹிந்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 12-த் பெயில் என்கிற திரைப்படம் வெளியானது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். அனுராக் பதக் என்பவர் எழுதிய புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருகும் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறும் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் சூர்யா கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா அல்லது அவரது 2டி நிறுவனம் சார்பாக வேறு ஹீரோ நடிக்க இதனை ரீமேக் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்து எல்லாம் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.