இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு | கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் | எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் |
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் விஷால் சம்மந்தப்பட்ட காட்சிகள் உடன் தொடங்கியதாக கூறப்படுகிறது.