Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவை கண்டு பல நடிகைகள் பின்வாங்கினார்கள் ; திலீப் வெளியிட்ட தகவல்

10 நவ, 2023 - 03:26 IST
எழுத்தின் அளவு:
Many-actresses-recoiled-at-the-sight-of-Tamannaah;-Posted-by-Dileep


இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக, குறிப்பாக அதில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் மூலமாக இன்னும் மிகப்பெரிய அளவில் தனது ரசிகர் வட்டத்தை விரிவாக்கி உள்ளார் நடிகை தமன்னா. அதுமட்டுமல்ல முதல் முறையாக பாந்த்ரா என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக திலீப் நடித்துள்ளார். ஏற்கனவே ராம்லீலா என்கிற வெற்றி படத்தை திலீப்பிற்கு கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீஸ் ஆக இன்று (நவ-10) இந்த படம் வெளியாகி உள்ளது.

இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் திலீப், “இந்த படத்தின் கதையை முழுவதும் உருவாக்கியதுமே கதாநாயகி பாத்திரத்தில் இதுவரை மலையாள சினிமாவில் நடித்திராத ஒருவரும் அதேபோல இதுவரை தனக்கு ஜோடியாக நடித்திராத ஒருவரும் நடித்தால் புதிதாக இருக்கும் என விரும்பினோம். அந்த அளவிற்கு கட்ஸ் கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. ஆனால் அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் அருண்கோபி எப்படியோ தமன்னாவிடம் கதையை கூறி அவரின் சம்மதத்தை வாங்கி விட்டார். படத்தின் பூஜையன்று தமன்னா கலந்து கொள்ளும் வரை எனக்கு அவர் இதில் நடிக்கிறார் என்கிற நம்பிக்கையே இல்லை.

அது மட்டுமல்ல இந்த படத்தின் தமன்னா தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளது. அதற்காக பல நடிகைகளை அணுகியபோது தமன்னா இந்த படத்தில் நடிப்பதால் தாங்கள் நடித்தால் பெரிய அளவில் வெளியே தெரிய மாட்டோம் என நினைத்து அவர்கள் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தனர். அதன்பிறகு நடிகை மம்தா மோகன் தாஸ் துணிச்சலாக அந்த இன்னொரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார் திலீப்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த எஸ்ஜே சூர்யா - ராகவா லாரன்ஸ்மம்முட்டியின் படப்பிடிப்பு ... இறுதி கட்டத்தை எட்டிய விஷால் 34வது படத்தின் படப்பிடிப்பு! இறுதி கட்டத்தை எட்டிய விஷால் 34வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)