பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அப்புச்சி கிராமம், உரியடி, குற்றம் 23, சங்கிலி புங்கிலி கதவதிற, ரங்கூன் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் இசை அமைத்த 'சித்தா' படத்தின் பின்னணி இசை பேசப்பட்டு வருகிறது. ஏராளமான தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு இசை அமைத்தாலும் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆடியோ புத்தகம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “ஆப் மூலம் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வரும் குக்கு எப்எம் நிறுவனம், பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன்பு சோழ தேசத்தை ஆண்ட அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதையை 9 எபிசோடுகளாக, ஆடியோ புத்தக வடிவில் உருவாக்குகிறது. இதை கண்களை மூடிக்கொண்டு கேட்டால், திரைப்படம் பார்ப்பது போல் உணர வைக்கும். இதற்கு நான் இசை அமைக்கிறேன். தமிழில் இது புதிய முயற்சி” என்றார்.