அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி போலி வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. ஷாரா பட்டேல் என்ற நடிகையின் கவர்ச்சி வீடியோவில் அவரது முகத்தை எடுத்துவிட்டு அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி அந்த போலி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா மந்தனா, தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில், இது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி போலி வீடியோ குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்துக்குள் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.