நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தசெ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளிவந்த படம் 'ஜெய்பீம்'. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான அப்படம் ஓடிடியில் வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
அப்படத்தில் காவல் துறையினரின் கொடுமைக்கு ஆளாகும் விளிம்பு நிலை குடும்பம் ஒன்றின் கதையை உணர்வுபூர்வமாகக் கொடுத்திருந்தார்கள். அதன் பின் அம்மக்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் செய்யப்படுவது அதிகமானது.
நேற்று இப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அது பற்றி எக்ஸ் தளத்தில் நடிகர் சூர்யா அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்த பட்டியல் ஒன்றைப் பதிவிட்டு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,” என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.