சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ஒரே நேரத்தில் மலையாளத்தில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. இதில் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கால்பந்து விளையாட்டிற்கு கமெண்டரி கொடுக்கும் ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை மனு சி. குமார் என்பவர் இயக்கியுள்ளார். இன்னொரு பக்கம் பிரபல கமர்சியல் இயக்குனரான ஜோஷி டைரக்ஷனில் உருவாகியுள்ள ஆண்டனி என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் கல்யாணி.
இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்தது. சேஷம் மைக்கில் பாத்திமா படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நவம்பர் 17ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.