'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 'கம்மட்டிபாடம்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இங்கு புகழ் பெற்றார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமிற்கு வில்லனாக நடித்துள்ளார்.
விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். குறிப்பாக அவர் மீது ஏகப்பட்ட அடிதடி வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடிபோதையில் போலீஸ் நிலையத்திலேயே கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எர்ணாகுளம் அருகே உள்ள கலூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விநாயகன் குடியிருப்பு வாசிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசிற்கு குடியிருப்புவாசிகள் தகவல் கொடுத்தனர்.
போலீசார், விநாயகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கும் அவர் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்து, அவர் மது அருந்தியதை உறுதி செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.