‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பார்த்திபன் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛வாவென வாய்ப்பிழந்து வரவேற்று வாய் நனைய முத்தமிட்டு, இறுதிவரை இருக்க விரும்பி இருக அணைத்தாலும், திட்டமிட்டபடி சட்டென விட்டு விலகி சென்று விடும் சென்ற வினாடிகள்.
தும்பை பூவின் மீது தூய்மையான பனித்துளி பறந்து, தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதும் உண்டு. இசையை விட தூய்மையானது எது. சென்ற படத்தில் ரஹ்மானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான் இமான். அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் ஐந்து பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில். மைனாவின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்து கொண்டு இருந்தது இனிமை இசையாய். ஓகே டைட்டில் அறிவிப்போம் விரைவில்...'' என்று பதிவிட்டு, டி. இமான் கம்போசிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.