‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் சூர்யா, சிம்பு, விஷால் ஆகியோருக்கு சிக்ஸ்பேக்கில தனி இடம் உண்டு. மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து உடம்பை முறுக்கி திறுக்கி சண்டை காட்சிகளில் ஊடு கட்டி அடித்தார்கள். ஆனாலும் அவர்களால் தொடர்ந்து அதை மெயிண்டெயின் பண்ண முடியவில்லை. இந்த நிலையில், பிரியாணிக்குப் பிறகு தான் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் பாக்சர் வேடத்தில் நடிக்கும் பருத்தி வீரன் கார்த்தியும் அடுத்து சிக்ஸ்பேக்குக்கு மாறப்போகிறார்.
அதைக்கேட்டு, சிக்ஸ்பேக் வைத்தால் என்னோட ஹேன்ட்ஸம் போயிடும் என்று முன்பு சொன்னீர்களே? அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது அப்ப சொன்னேன். ஆனால் இப்ப இந்த கதைக்கு அப்படி நடித்தால் தான் சரியாக இருக்கும். மேலும், இன்றைய ரசிகர்கள் நடிகர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். சும்மா படத்துக்குப்படம் நாலு காமெடியை பேசி தள்ளிட்டெல்லாம் தொடர்ந்து சமாளித்து விட முடியாது. அவ்வப்போது வலுவான படங்கள்லயும் நடிக்கனும். பர்பாமென்ஸ் பண்ணனும். அப்பத்தான் ரசிகர்கள் நம்மளை உசரத்துல வச்சிருப்பாங்க. அதனால்தான், என்னோட ஹேன்ட்ஸம் பற்றி கவலைப்படாம, சிக்ஸ்பேக்குக்கு மாற முடிவெடுத்திருக்கிறேன் என்றாராம் கார்த்தி.