விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
முன்னணி மலையாள நடிகையான லிஜோ மோல் ஜோஷ், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் 'ஜெய் பீம்' படம்தான் அவருக்கு புகழை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு 'தீதும் நன்றும்' படத்தில் நடித்தார். தற்போது அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடமை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார்.
'கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா 1990களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செட்டுகள் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.
பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் 'பருத்தி வீரன்' சரவணன், 'கேஜிஎப்' மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் ஏராளமான படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள பாண்டியன் பரசுராம், முதல்முறையாக தனது விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.