தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொதுவாக திரைப்படங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவேளை விடுவார்கள். தியேட்டர் கேண்டீன் விற்பனைக்காக இந்த இடைவெளி விடப்படுகிறது. ஆனால் லியோ படத்தின் நீளம் இரண்டேமுக்கால் மணி நேரம். ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட வேண்டும். இதை கருத்தில் கொண்டு லியோ படத்திற்கு இடைவேளை நேரத்தை குறைக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
'லியோ' சினிமா சிறப்புக்காட்சிகள் நேரம் தொடர்பான பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். பின்னர் சங்கச்செயலாளர் வி.டி.எல்.சுப்பு நிருபர்களிடம் கூறியதாவது: நாளையில் இருந்து 6 நாட்களுக்கு சிறப்பு காட்சியாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்த முதல் அமைச்சருக்கு நன்றி. பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில்தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கும்.
லியோ படம் பெரிய படம் என்பதால் இடைவேளை நேரத்தை 5 நிமிடமாக குறைக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழக அரசு சொன்னபடி காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளையும் முடித்துவிடுவோம். ஏற்கனவே முன்பதிவை தொடங்கி விட்டோம். இனி அதை மாற்ற முடியாது. அதனால் 9 மணிக்கு காட்சியை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
19ம் தேதியன்று (நாளை) மட்டும் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. அன்றைய தினம் அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அரசு கொடுத்த நேரத்தின்படி படத்தை ஓட்ட தயாராகி விட்டோம். 5 காட்சிகள் திரையிடப் போகிறோம். தயாரிப்பாளர்கள் தரப்பில் காலை 7 மணிக்கு படத்தை தொடங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை 9 மணிக்கு தொடங்குவதில் என்ன வித்தியாசம் உள்ளது. காலை 9 மணி என்ற அளவில் முன்பதிவு டிக்கெட் கொடுத்துள்ளோம். அதை மாற்றுவது சரியாக இருக்காது. பிரச்னை வரும். ஆனாலும் அரசு என்ன அனுமதி கொடுக்கிறதோ அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.