அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம். இப்படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. முதலில் வெளியிட்ட ஆணையில் எத்தனை மணிக்கு முதல் காட்சியை ஆரம்பிக்கலாம், எத்தனை மணிக்கு முடிக்கலாம் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
இதனால், சில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சிக்கே முதல் காட்சியை நடத்துவதாக முன்பதிவை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று அரசு தரப்பில் மீண்டும் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டார்கள். அதன்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவில் 1.30 மணிக்குள் அந்த 5 காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். இவற்றை மீறுகிறார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்கள்.
நேற்று மாலை வெளியான அந்த ஆணையைத் தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் காலை காட்சி 9 மணிக்கு என்பதை உடனடியாக மாற்றினார்கள். இருப்பினும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் இன்னும் காலை காட்சி 8 மணி என்பதை மாற்றாமல் இருக்கிறார்கள். அத்தியேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.