ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
'பேட்ட, மாஸ்டர், ஜகமே தந்திரம்' படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா நடித்துள்ளார்.
நேற்று டுவிட்டர் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த மாளவிகாவிடம், 'தங்கலான்' படம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, “தங்கலான்' இதுவரையில் மிகவும் சவாலான ஒன்று. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகத்தை எனக்குள் பார்த்ததில்லை. இக்கதாபாத்திரம், எனது நடிப்பு உங்களுக்கு நிஜமாக பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது,” என்று பதிலளித்துள்ளார்.
'தங்கலான்' படம் தமிழில் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என பெரிதும் நம்புகிறார் மாளாவிகா. 2024 பொங்கல் வெளியீடாக 'தங்கலான்' வரும் எனத் தெரிகிறது.