த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? |
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
இரு நாட்களுக்கு முன், 'சித்தா' திரைப்பட 'புரமோஷன்' நிகழ்ச்சிக்காக, கர்நாடகா சென்றிருந்தார் சித்தார்த். நிகழ்ச்சியின் நடுவே புகுந்த கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலாட்டா செய்ததும், நிகழ்ச்சியின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.