தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
இரு நாட்களுக்கு முன், 'சித்தா' திரைப்பட 'புரமோஷன்' நிகழ்ச்சிக்காக, கர்நாடகா சென்றிருந்தார் சித்தார்த். நிகழ்ச்சியின் நடுவே புகுந்த கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலாட்டா செய்ததும், நிகழ்ச்சியின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.