டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
இரு நாட்களுக்கு முன், 'சித்தா' திரைப்பட 'புரமோஷன்' நிகழ்ச்சிக்காக, கர்நாடகா சென்றிருந்தார் சித்தார்த். நிகழ்ச்சியின் நடுவே புகுந்த கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலாட்டா செய்ததும், நிகழ்ச்சியின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.




