பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங், ‛இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவித்தனர். வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை தற்போது அறிமுகபடுத்தி வருகின்றனர். நடிகை துஷரா விஜயன் இப்படத்தில் நடிப்பதை அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது நடிகை ரித்திகா சிங் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.