Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட்

25 செப், 2023 - 11:00 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-Tweet-and-off-the-comment-option

ஏஆர் ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழக முதல்வர் கூட அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து அன்றிரவு முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட ஆரம்பித்தனர். முதலில் அதை கண்டு கொள்ளாத ரஹ்மான் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது போன்ற வீடியோவைப் பதிவிட்டார். அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து எங்களது குழுவினருக்கு உங்கள் குறைகளையும், டிக்கெட் காப்பியையும் அனுப்பி வையுங்கள், ஆவண செய்வார்கள் என பதிவிட்டார். அதையடுத்து டிக்கெட் கட்டணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

காவல் துறையும் அது குறித்து விசாரணை நடத்தி நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமூக வலைத்தளங்கள் பக்கம் வராத ரஹ்மான் நேற்று திடீரென சென்னையில் நடந்த 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்தப் பதிவுகளின் 'கமெண்ட்' பகுதியை பிளாக் செய்துள்ளார். அதனால், யாரும் கமெண்ட் பதிவிட முடியாது.

ரசிகர்கள் மீதும், விமர்சனங்கள் மீதும் அவ்வளவு பயம் உள்ள ரஹ்மான் எதற்காக 'கமெண்ட்' பகுதியை பிளாக் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ?'சந்திரமுகி 3' நடந்தால் ... ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in