ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

பி.வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளிவந்த 'மணிச்சித்திரத்தாழ்' என்ற படத்தை 12 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்து 2004ல் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்கள். அப்படத்தை அப்படியே தமிழில் 'சந்திரமுகி' என ரீமேக் செய்தார்கள்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு 'சந்திரமுகி 2' படத்தை இந்த வாரம் வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் பாகத்தில் நடித்த வடிவேலு தவிர அப்படத்தில் நடித்த யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இரண்டாம் பாகத்தின் முடிவில் 'சந்திரமுகி 3' படத்திற்கான தொடர்பு ஒன்றையும் வைத்துள்ளாராம் இயக்குனர் பி.வாசு.
இந்த 'சந்திரமுகி 2' எதிர்பார்த்தபடி வெற்றி பெற்று வசூலைக் குவித்தால் 3ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரஜினி நடிப்பாரா அல்லது இரண்டாம் பாகத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் நடிப்பாரா என்பது அதற்கான கதை முழுவதுமாகத் தயாரான பின்தான் தெரிய வரும்.