பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த படம் உப்பென்னா. இந்த படத்தில் அவரது மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த நிலையில் அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கமிட்டான ஒரு படத்தில் கிர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தபோது அதற்கு அவர் தடை போட்டார். இதுபற்றி தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் கூறுகையில், ‛‛உப்பென்னா தெலுங்கு படத்தில் கிர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். அது ஒரு மிகப்பெரிய வெற்றி படம். மகளாக நடித்த அவருடன் நான் ரொமான்ஸ் செய்து நடிக்க விரும்பவில்லை. அதனால் தான் அவரை தவிர்த்து விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு கூறினேன்'' என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.