பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக் ஷன் படமாக தயாராகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 3 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போவதாக ஒருவாரமாகவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் அதிகளவில் உள்ளதாம். அந்த பணிகள் முடியாததால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, ‛‛அயலான் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம். நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான்,'' என இயக்குரனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.