‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக் ஷன் படமாக தயாராகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 3 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போவதாக ஒருவாரமாகவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் அதிகளவில் உள்ளதாம். அந்த பணிகள் முடியாததால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, ‛‛அயலான் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம். நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான்,'' என இயக்குரனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.