பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தனுசுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த பாடலின் இரண்டு வரிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்...'' என்று பதிவிட்டுள்ளார் ஜி. வி.பிரகாஷ். இந்த பாடலை கேபர் வாசுகி என்பவர் எழுதியுள்ளார்.