என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளை படம் பிடித்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர்.
இந்த படத்தில் காஷ்மீர் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் தனது தலை முடியை நீளமாக வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாகவே தான் வெளியே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு நீளமான குல்லா ஒன்றை அணிந்து தனது ஹேர்ஸ்டைல் வெளியே தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தொப்பி எதுவும் அணியாமல் தனது வழக்கமான ஹேர்ஸ்டைலுடன் காட்சியளித்தார். இனி அந்த படத்திற்கு நீளமான தலைமுடி தேவையில்லை என்பதால் வழக்கமான தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.




