இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்பட்ட ஏஆர் ரஹ்மானின் இமேஜை கடந்த வாரம் அவர் சென்னையில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
பல்லாயிரம் பேர் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழையக் கூட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்தது என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த வாரம் முழுவதும் டிவிக்களில் விவாதம் நடத்தும் வரை அந்த இசை நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடும் விமர்சனங்கள் எழுந்த பின் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் தளத்தில் டிக்கெட்டுகளின் காப்பியையும், அவர்கள் குறைகளையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின் ரஹ்மான் தரப்பிலிருந்து 4000 பேருக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளிவந்தன. பல சினிமா பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தோ, பணம் திருப்பித் தரப்படுவது குறித்தோ சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ரஹ்மான் பதிவிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் தரும் ரஹ்மான் கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்து வருகிறார்.