சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிம்புவின் ஜோடியாக சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சனா கான். தொடர்ந்து பரத்துடன் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மட்டுமே நடித்த அவர் அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறவில்லை. இடையில் மீண்டும் சிம்புவுடனேயே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூரத்தை சேர்ந்த முப்தி அனாத் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை ஒன்றுக்கும் தாயானார் சனா கான்.
இந்த நிலையில் லண்டனுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சனா கான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனில் சென்று இறங்கிய அவர் உட்பட நூற்றுக்கணக்கான பேருக்கு அவர்கள் கொண்டு சென்ற லக்கேஜ் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. விமான நிலையத்தில் பல மணிநேரம் தனது உடைமைகளை தேடி அவர் அலைக்கழிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஓட்டலில் தங்கி இருக்கும் சனா கான் இதுகுறித்து தொடர்ந்து வீடியோக்களையும் அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார்.
அதில் லண்டன் வந்து இறங்கி இரண்டு நாட்கள் ஆகியும் தனது லக்கேஜ் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை என்றும், கடந்த இரண்டு நாட்களாக லக்கேஜ் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் மாற்றுத் துணி கூட இல்லாமல் ஒரே உடையை அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 5 உடை மற்றும் 10 டயபர் மாற்ற வேண்டிய சூழலில் இருப்பதால் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.