வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்த நிலையில், தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து எச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். இப்படி கமலின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்ததை அடுத்து அவரது முந்தைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் திரைக்கு வர தொடங்கி உள்ளன.
சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலைவில், அடுத்தபடியாக ஆளவந்தான் படமும் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த பேசும் படம் என்ற படமும் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் புஷ்பக் என்ற பெயரில் எடுக்கப்பட்டு தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வெளியானது.
இது குறித்த தகவலை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது. இந்த படம் 1987ம் ஆண்டு 35 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதோடு, வசனமே இல்லாமல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.