22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அவரது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்கிற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தனது சார்பில் தன்னுடைய ஸ்கிரிப்டுக்கு எந்தெந்த நடிகர்- நடிகைகள் பொருத்தமாக இருப்பார்கள் என்பது குறித்த ஒரு பட்டியலை லைகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளாராம் சஞ்சய். அதனால் அது குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.
அதோடு இசையமைப்பாளர் விவகாரத்தில் தன்னைப் போலவே ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள சஞ்சய், ஏ. ஆர் .ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். ஆனால் இதற்கு லைகா நிறுவனம் உடன்படவில்லையாம். இயக்குனர் புதுமுகமாக இருப்பதால், இசையமைப்பாளர் ஒரு பிரபலமாக தான் இருக்க வேண்டும். அதுதான் வியாபாரத்துக்கு பலமாக இருக்கும் என்று சொல்லி லைகா நிறுவனத்தின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத்தையே இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்களாம். இதன்மூலம் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கு இசையமைப்பது கிட்டத்தட்ட அனிருத் தான் என்கிறார்கள்.