ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

முன்பெல்லாம் நடிகர் சித்தார்த், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் . அந்த கட்சியினர் என்ன ஒரு கருத்து வெளியிட்டாலும் உடனடியாக தனது சார்பில் அதற்கு எதிர் கருத்து வெளியிடுவார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் சித்தார்த்துக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுவதை நிறுத்திவிட்டார் சித்தார்த்.
இப்படியான நிலையில், நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்கத்தான் விழிப்புணர்வு பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதை அடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்தியாவின் பெயர் பாரத் என மாற்ற இருப்பதாக கூறப்படுகிறதே என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டபோது, அதற்கு சித்தார்த், நாள் இப்போது இந்தியாவில் உள்ள சென்னையில் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் இதைப் பற்றி பேசுவோம். இங்கு வந்து, யார் என்ன பெயர் வைத்தார்கள் என்று பேசுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்று கோபமாக பதில் கொடுத்தார்.
கருத்து சொல்கிறோம் என எதையாவது உளறிவிட்டு பின்னர் அதுவே தனக்கு பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்பதால் சித்தார்த் இந்த கேள்வியை தவிர்த்து விட்டார் போலிருக்கிறது.