'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும், வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மிகச்சிறந்த நாள்.. எனது தந்தையுடன் டப்பிங் பணியில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.