'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை |
முதல் இரண்டு படங்களில் நடித்தபோது ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில் இருந்து ஹன்சிகா, ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப்பிறகு ராசியான நடிகையாகிவிட்டார். அந்த நேரம் பார்த்து தமன்னா வெளியேறினார். விளைவு காலியாக இருந்த நம்பர்-ஒன் நாற்காலியில் ஹாயாக ஏறி அமர்ந்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் நயன்தாராவுக்கு செல்லவிருந்த சில முக்கிய படங்களை குறைவான சம்பளம் பேசி தன் பக்கம் கொக்கிப்போட்டு இழுத்தார். இதனால் செம கடுப்பாகி விட்டார் நயன். சீனியர் நடிகையான தன்னிடம் இந்த புதுவரவு நடிகை மோதுவதா? எங்கிட்டேவா... என்று போட்டிக்கோதாவில் குதித்தார்.
அதன்காரணமாக, இதற்கு முன்பு யாருடைய சகவாசமே ஜென்மத்துக்கும் வேண்டாமென்று நினைத்தாரோ அந்த சிம்புவுடன் நடிப்பதற்குகூட தூது விட்டார் நயன்தாரா. ஆனால் தனது வாலு, வேட்டை மன்னன் என்ற இரண்டு படங்களுக்கும் ஹன்சிகா புக் பண்ணி வைத்திருந்த சிம்பு, மீண்டும் நயனுடன் ஜோடி சேர்ந்தால் கிசுகிசுக்கள் மறுபடியும் புகைந்து விடும் என்று அவருக்கு பதில் தூது அனுப்பவில்லை. இருப்பினும் மனம் தளரவில்லை நயன். அடுத்தபடியாக ஹன்சிகாவை புக் பண்ண காத்திருக்கும இயக்குனர்களை கிளுகிளு உடையில் சந்தித்து, இப்போதும் நான் இளவட்ட நடிகைதான் என்பதை சொல்லாமல் சொல்லி சான்ஸ் கேட்கிறாராம். கூடவே இப்போது அவர் அஜீத், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருவதால், ஹன்சிகாவின் ஓரிரு படங்கள் நயன்தாரா பக்கம் திரும்பும் நிலையில் உள்ளதாம். இதனால் இதுவரைக்கும், நயன்தாராவால் நம்மை நெருங்க முடியாது என்று நெஞ்சை நிமிர்ததி வந்த ஹன்சிகா இப்போது அவர் தனது படங்களை அதிரடியாக அபகரிப்பதைப்பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம்.