திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
நேஷனல் கிரஷ் என பட்டம் கொடுத்து அனைவரும் அழைப்பதாலோ என்னவோ நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் ஹிந்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் என்கிற திரைப்படத்தை தான் ரொம்பவும் எதிர்பார்த்து இருக்கிறார். அதுமட்டுமல்ல ஹிந்தியிலேயே தொடர்ந்து காலுன்றும் விதமாக ஷாகித் கபூருடன் அடுத்ததாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதனை ஒப்புக் கொண்டார்.
இதற்காக தெலுங்கில் நிதின் ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை கால்சீட் காரணம் காட்டி ஒதுக்கினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது ஷாகித் கபூர் படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக ராஷ்மிகாவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்னும் நிதின் படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் ராஷ்மிகாவே அந்த படத்தை ஒப்புக் கொள்வாரா, இல்லை அந்த படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.