26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதை போன்று இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரே படத்தை தயாரிக்கும் டிரண்ட் எப்போதோ வந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது தொடங்கி உள்ளது.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) திரைப்படங்களை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. மற்ற இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.




