‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
'மாவீரன்' படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிக டைட்டிலாக 'எஸ்கே21' என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 'மீண்டும் சந்திப்போம், காஷ்மீர், எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது.