பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. 500 கோடி வசூலை தாண்டி தற்போதும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேரக்டர் ஆர்சிபி ( ராயல் சேலன்ஞ்சர் பெங்களூரு) என்ற ஜெர்சியை அணிந்து நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறுவார்.
"இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபர் எங்கள் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும்" என்று ராயல் சேலன்ஞர்ஸ் அணியின் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீமன்றம் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதோடு தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும்போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.