23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? |

தெலுங்கு சினிமாவின் கடவுளாக கொண்டாடப்படுகிறவர் என்.டி.ராமராவ். மூன்று முறை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர மக்களின் மனதில் கிருஷ்ண பரமாத்மாவாக பார்க்கப்படுகிறவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை, தலைநகர் புதுடில்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் என்டிஆரின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் என்டிஆரின் மருமகனுமாக சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். என்டிஆரின் பேரனும், பிரபல ஹீரோவுமான ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.