‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்தார். அஜித்தின் திரையுலக பயணத்தில் அந்த படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் தான் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த நிகழ்வும் நடந்தது. இதனால் மங்காத்தா வெற்றியை தொடர்ந்து உடனடியாக விஜய்யை வைத்து வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்குவார் என்று அப்போதே சொல்லப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 12 வருடம் ஆகிவிட்டது.
லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற கேள்விதான் தற்போது திரை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லியோ படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து மீண்டும் நடித்துள்ளார் திரிஷா.
ஆனால் தான் இயக்கும் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட ஏற்கனவே விஜய்யுடன் நடித்த நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லை என சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சூசகமாக சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு. குறிப்பாக இதுவரை விஜய்யுடன் நடித்திராத ஒரு நடிகையைத்தான் இந்த படத்திற்கு கதாநாயகியாக தேர்வு செய்ய உள்ளாராம் வெங்கட்பிரபு. அந்த அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்க போகிறதோ, இன்னும் சில நாட்களில் விடை தெரிந்து விடும்.