படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா என்கிற திரைப்படம் வரும் ஆக-24ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி, யூடியூப், சோசியல் மீடியா என பரபரப்பாக தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயதான பெண் ஒருவர் தன்னிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் பொது மேடையில் தான் பட்ட வலியையும் அவஸ்தையையும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பொது நிகழ்வுகளில் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சில பெண்கள் புகைப்படத்திற்காக நிற்கும் தருணங்களில் எனது தாடையில் கைகளை வைத்து கொஞ்சுவது உள்ளிட்ட சில விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். குறிப்பாக ஒரு சமயம் கொஞ்சம் வயதான பெண் ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நின்றபோது திடீரென எனது பின்புறத்தில் கிள்ளிவிட்டார். அவரது இந்த எதிர்பாராத செய்கையால் அதிர்ச்சி ஒருபுறம், வலி ஒரு புறம் இருந்தாலும் அதையும் பொருத்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தேன். எதற்காக சிலர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்று இப்போது வரை புரியவில்லை” என்று கூறியுள்ளார்.