மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா என்கிற திரைப்படம் வரும் ஆக-24ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி, யூடியூப், சோசியல் மீடியா என பரபரப்பாக தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயதான பெண் ஒருவர் தன்னிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் பொது மேடையில் தான் பட்ட வலியையும் அவஸ்தையையும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பொது நிகழ்வுகளில் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சில பெண்கள் புகைப்படத்திற்காக நிற்கும் தருணங்களில் எனது தாடையில் கைகளை வைத்து கொஞ்சுவது உள்ளிட்ட சில விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். குறிப்பாக ஒரு சமயம் கொஞ்சம் வயதான பெண் ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நின்றபோது திடீரென எனது பின்புறத்தில் கிள்ளிவிட்டார். அவரது இந்த எதிர்பாராத செய்கையால் அதிர்ச்சி ஒருபுறம், வலி ஒரு புறம் இருந்தாலும் அதையும் பொருத்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தேன். எதற்காக சிலர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்று இப்போது வரை புரியவில்லை” என்று கூறியுள்ளார்.